பொ.செ: ஜெ.வுக்கு அத்வானி-கெளடா வாழ்த்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக 6வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு அத்வானி, தேவெ கெளடா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராக 6வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜெயலலிதா. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு முன்னாள் துணைப் பிரதமரும், நாடாளுமன்ற மக்களவை குழு எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி, ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, சமூகநீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications