போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
சென்னை: சென்னையில் உள்ள போலீஸ் குடியிருப்பில், காதலியுடன், மது மயக்கத்தில் கும்மாளம் போட்டு அக்கம் பக்கத்தினரை கூச வைத்த தலைமைக் காவலரின் மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் உள்ள எக்ஸ் பிளாக்'கில் உள்ள 5-ம் நம்பர் வீட்டில் காதல் களியாட்டம் நடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் புகார் வந்தது.
இதையடுத்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ. நசீமாவுக்குத் தகவல் பறந்தது. அவர் போலீஸாருடன் சம்பந்தப்பட்ட குடியிருப்புக்கு விரைந்தார்.
அப்போது அந்த வீட்டிலிருந்து அரை குறை ஆடையுடன் ஒரு பெண் வேகம் வேகமாக வெளியேறி காத்திருந்த ஆட்டோவில் ஏறித் தப்பினார்.
இதையடுத்து போலீஸார் உள்ளே நுழைந்தனர். அங்கு மது போதையில் ஒரு இளைஞர் இருந்தார். அவரிடம் நசீமா யார் என்ன என்று கேட்டதற்கு, நான் இன்ஸ்பெக்டர் மகன், என்னை விசாரிக்க யாருக்கும் ரைட்ஸ் இல்லை என்று உளறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபரை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்று தண்ணீர் அடித்து போதையை தெளிவிக்க முயன்றனர். ஆனால் போதை சரியாக தெளியவில்லை. இருப்பினும் விசாரணையில், அவரது பெயர், புரூஸ் பியாசோ (25) என்றும், அவரது தந்தை குட்கர்னி மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏட்டாக பணிபுரிவதும் தெரிய வந்தது.
உடனடியாக குட்கர்னியை எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது தந்தையிடமும், எஸ்.ஐ.நசீமாவிடமும் ஆபாசமாக பேசி சண்டை போட்டார் பியாசோ.
எனக்கு கராத்தே தெரியும், மோதிப் பாருங்கள் பார்ப்போம் என்றும் சவால் விட்டார். இதனால் போலீஸார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவரைக் கைது செய்த போலீஸார், போதை தெளிந்த பின்னர் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனந்தன் என்பவரது வீட்டில்தான் பியாசோ கும்மாளம் போட்டுள்ளார். ஆனந்தன் குடும்பத்தினருடன் வெளியில் போயிருந்ததால், தனது வீட்டை கும்மாளத்திற்காக பியாசோவிடம் விட்டுச் ெசன்றுள்ளாராம்.
கைதான பியாசோ எம்.பி.ஏ படித்தவர். தரமணியில்உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கை நிறைய சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications