மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது
விழுப்புரம்: குடும்பம் தகராறில் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்ராயநல்லூரைச் சேர்ந்தவர் ஏழுமலை (32). இவருக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி (27) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபிநயா (3) என்ற மகள் இருக்கிறாள்.
ஏழுமலைக்கும், சுந்தரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதனால் கோபித்துக் கொண்ட சுந்தரி, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து ஏழுமலை, சுந்தரியை சந்த்து சமாதானம் செய்து குடும்பம் நடத்த பல முறை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை நேற்று சுந்தரியின் சகோதரர் ஆறுமுகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சுந்தரி கணவர் வீட்டுக்கு சென்றார். அப்போது, இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, கட்டையால் சுந்தரியை பயங்கரமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுந்தரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுந்தரியின் சகோதரர் ஆறுமுகம் திருவெண்ணைநல்லூர் போலீஸில் புகார் செய்தார். இதையடு்த்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications