இலங்கையில் கடும் சண்டை: 35 புலிகள் - 1 ராணுவ வீரர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 புலிகளும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி வரும் இலங்கை ராணுவம் கிளிநொச்சியைக் குறி வைத்து சண்டையிட்டு வருகிறது. அதைத் தடுக்கும் வகையில் புலிகளும் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

கிளிநொச்சியில் உள்ள வேதமாகுளம் பகுதியில் நடந்த தாக்குதலில் 4 புலிகளும், முல்லைத்தீவு, அக்கராயங்குளம் பகுதியில் 3 புலிகளும், வெளிஓயா பகுதியில் 5 புலிகள் உள்பட 35 புலிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ராணுவ தரப்பில் ஒரு வீரர் பலியானார். 11 வீரர்கள் காயமடைந்தனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+