பெரா வழக்கு மறு பரிசீலனை: தினகரன் கோரிக்கை தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Dinakaran
சென்னை: தன் மீதான அந்நியச் செலாவணி (பெரா) வழக்கை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக ராஜ்யசபா எம்பி டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து 12 வருடமாக இழுபறியாக உள்ள இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாயை ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக கடந்த 1996ம் ஆண்டு பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு பெரா சட்டத்தின் கீழ் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, துணை புகாரையும் சேர்த்து இறுதி விசாரணை அறிக்கையை 2வது பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதையடுத்து புகார்களின் நகல்களைக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார் தினகரன். இந்த நிலையில், 12 வருடமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு குறித்து மறு பரிசீலனை செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாஷா, தினகரின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கை 54 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என பொருளாதாரத் தடுப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

இரு தரப்பும் தேவையில்லாமல் வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்தக் கூடாது. வழக்கு விரைவில் முடிவடைய ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட் நீதிபதி, வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் நகல்களை விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் பார்க்க தினகரனுக்கு பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+