டெல்லி குண்டுவெடிப்பு: பாக். அதிபர் சர்தாரி, கிலானி கண்டனம்
இஸ்லாமாபாத்: டெல்லி குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் யுசூப் ரஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான எதிரிகளின் தாக்குதல் இது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் கிலானி கூறுகையில், மனிதாபிமான எதிரிகள் இந்த தாக்குலை நடத்தியுள்ளனர். உலகின் எந்த பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் பாகிஸ்தான் அதை கண்டிக்கும். தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களின் வலிகளை நாங்கள் அறிவோம். பாகிஸ்தான் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைதிக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். மேலும் முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications