மன்மோகன் சிங் விலக வேண்டும்: பாஜக

Subscribe to Oneindia Tamil

பஹ்ரைச் (உ.பி): அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் அரசு தோல்வி அடைந்து விட்டது. எனவே மக்கள் நலனை மனதில் கொண்டு பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் விலக வேண்டும். லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

உ.பி. மாநிலம் பஹ்ரைச் நகரில் நடந்த விஜய் சங்கல்ப கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கக் கூடாது. அதற்கான தகுதியை அது இழந்து விட்டது.

அனைத்து வகையிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது. எனவே மக்கள் நல்லதுக்காக பிரதமர் பதவியை மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்.

தீவிரவாதத்தை அடக்குவதில் இந்த அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறி விட்டது.

எனவே பிரதமர் பதவியை உடனடியாக மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். விரைவில் தேர்தல் நடந்து புதிய அரசு தேர்ந்தெடுக்க அவர் உதவ வேண்டும். அப்போதுதான் மக்களின் துயரங்கள் அனைத்துக்கும் விடிவு காலம் பிறக்கும்.

அணு ஒப்பந்த விவகாரத்திலும் இந்த அரசு மக்களை தவறான பாதையில் திசை திருப்பிக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் மக்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றார் ராஜ்நாத் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+