சிவராஜ் பாட்டீலை ஒதுக்கும் சோனியா

ஆனால், உள்துறையை மட்டமாகக் கையாண்டு வரும் பாட்டீலை சோனியா காந்தி ஒதுக்க ஆரம்பித்துள்ளார்.
ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து உளவுப் பிரிவை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விட்டார் உள்துறை சிவராஜ் பாட்டீல் என பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
குறிப்பாக, டெல்லியில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக முன் கூட்டியே தெரிவித்தும் அதை சிவராஜ் பாட்டீல் சரிவர கையாளவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவும் சிவராஜ் பாட்டீலை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து நேற்று நடந்த காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளசிவராஜ் பாட்டீல் அழைக்கப்படவில்லை. அவரது பதவியைப் பறிக்க சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் கிளம்பின.
இந்த நிலையில் நேற்றைய கூட்டத்திற்குப் பின்னர் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், இக்கட்டான சமயம் இது. இந்தநேரத்தில்உள்துறை அமைச்சரின் ராஜினாமாவைக் கோருவது சரியல்ல.
இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியலை செய்கிறார்கள். பாஜக ஆட்சியில்இருந்தபோது, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ராஜினமா செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் அவர் ராஜினாமா செய்தாரா. அக்கோரிக்கைகளையெல்லாம் பாஜக நிராகரித்து விட்டது.
அப்படி இருக்கையில் இப்போது சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்யத் தேவையில்லை. அதற்கான அவசியம் எழவில்லை. கட்சிக்குள்ளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள்ளும் அதுகுறித்து கேள்வி எழவில்லை என்றார்.
இதேபோல தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சிவராஜ் பாட்டீலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications