'தீவிரவாதிகள்'-நெல்லையில் அதிரடி தாக்குதல் படையினர் முகாம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தீவிரவாத நடவடிகைகளை ஒடுக்க நெல்லையில் அதிரடி தாக்குதல் படை போலீசார் (Rapid action force) முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் மேலப்பாளையம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் புலனாய்வு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாளை ஆயுதப்படை மைதானத்தில் தங்கியிருக்கும் இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.
இவர்கள் மேலப்பாளையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையை கணக்கெடுத்து ஜாதி, மத வாரியாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும் பூர்வீகத்தினர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதேபோல் பேட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் செல்ல உள்ளனர்.












Click it and Unblock the Notifications