இலங்கை விமானப்படை தாக்குதல்: 45 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ராணுவமும் விமானப்படையும் இணைந்து நடத்திய தாக்குதலில் 41 புலிகளும் மற்றும் 4 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கிளிநொச்சி, வன்னி பகுதிகளில் ராணுவமும் விமானப்படையும் சேர்ந்து கூட்டுத் தாக்குதல் நடத்தின. நேற்று காலை முதல் தொடர்ந்து நான்கு முறை விமான தாக்குதல் நடந்ததாகவும், அதில் 12 புலிகள் கொல்லப்பட்டதாகவும் விமானப்படை தரப்பில் கூறப்படுகிறது.
அண்டங்குளம் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 புலிகளும், கிளிநொச்சி பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மொத்தம் 41 புலிகள் பலியாகியுள்ளனர். இதில் ராணுவ தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதை புலிகள் உறுதிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications