தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் சென்னை: டிஜிபி
சென்னை: தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் சென்னை இருப்பதாகவும், தாக்குதல் நடக்கக் கூடும் என்றும் தகவல் கிடைத்திருப்பதாக டிஜிபி ஜெயின் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், டெல்லியில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னையி்ல பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரின் பல பகுதிகளில் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும், அவற்றை செயலிழக்கச் செய்யவும் நிபுணர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications