என்னை யாரும் தூண்டிவிடவில்லை-வடிவேலு
சென்னை: விஜயகாந்த்துக்கு எதிராக என்னை யாரும் தூண்டி விடவில்லை என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில்தான் வடிவேலு புகார் கூறுகிறார். முதல்வருடைய விளையாட்டில் வடிவேலு பகடைக்காயாகி விட்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்த வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், யாரும் என்னை தூண்டி விடவில்லை என்றார்.
அவர் கூறுகையில், நான் யாருடைய தூண்டுதலின் பேரிலும் புகார் கூறவில்லை. நடந்ததை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு எல்லா மக்களுடைய ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. நான் தமிழக மக்களின் வீட்டுப் பிள்ளை. அவர்களுடைய ரேஷன் கார்டுகளில் மட்டும்தான் எனது பெயர் இல்லை.
நான் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு ஜோக்கர். எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் எதையும் செய்ய அவசியம் இல்லை.
மக்களிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறதா, அவருக்கு இருக்கிறதா என்று கேட்டால், அவரை விட எனக்குத்தான் மக்கள் செல்வாக்கு அதிகம் என்றார் வடிவேலு.












Click it and Unblock the Notifications