சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கு ஜாமீன்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் மற்றும் சண்முகத்துரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி சென்னை தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு ஊழியர்களைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகியோர் தலைமறைவானார்கள்.
3 பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அங்கும் மனுதள்ளுபடியானது.
இதையடுத்து 3 பேரும் கோர்ட்டில் சரணடைந்தனர்.அதன் பின்னர் 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி 3 பேரும் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து 3 பேரும் உயர்நீதிமன்றத்தை அணுகினர். 3 பேரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி ரகுபதி, 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார்.
அதன்படி 3 பேரும் தலா ரூ. 25 ஆயிரம் ரொக்க ஜாமீன் மற்றும் தலா இரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக மூன்று உரிமையாளர்களும் தாக்கல் செய்திருந்த மனுவில், சதிச் செயல் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம். இதை மாம்பலம் போலீஸார் விரிவாக விசாரிக்க வேண்டும்.
உயிரிழப்பு ஏற்படும் வகையில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியே அஜாக்கிரதையான போக்கில் நாங்கள் செயல்பட்டிருந்தாலும் கூட, அதற்கு எங்கள் மீது 304 ஏ பிரிவின் கீழ் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீஸார், 304வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வம், ஜெபசிங் ஆகியோர் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள்












Click it and Unblock the Notifications