தென் ஆப்பிரிக்க அதிபர் டபோ மெபகி ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் டபோ மெபகி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

வெள்ளையர் ஆதிக்கம் அகன்ற பின்னர் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் தந்தையான நெல்சன் மண்டேலா, அந்த நாட்டின் முதல் கருப்பர் இன அதிபராக பொறுப்பேற்றார். மண்டேலா 1999ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து மெபகி அதிபராகப் பொறுப்பேற்றார். அது முதல் அவரே அப்பதவியில் நீடித்து வந்தார்.

மெபகி தென் ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சியைச்ேசர்ந்தவர். சமீப காலமாக கட்சிக்குள் பிரச்சினை வெடித்தது. மெபகி மீது பல்வேறு ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. நீதித்துறை செயல்பாடுகளிலும் மெபகி தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதையடுத்து உடனடியாக பதவி விலகுமாறு மெபகிக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டது. இதை ஏற்ற மெபகி தனது பதவியை இன்று ராஜினாமா செய்து விட்டார். இருப்பினும் தன் மீதான அனைத்துப் புகார்களையும் அவர் மறுத்துள்ளார்.

மெபகியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அவர் விலகியுள்ளார்.

விரைவில் நாடாளுமன்றம் கூடி புதிய அதிபரைத்தேர்வு செய்யும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற சபாநாயகரும், கட்சியின் துணைத் தலைவருமான பலேகா மபடே புதிய அதிபராக தேர்வு செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

மெபகி பதவி விலக முக்கிய காரணமான அவரது தீவிர எதிர்ப்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜேக்கப் ஸூமாவின் பெயரும் அதிபர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+