For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: பணிகள் -ஏடிஎம்.கள் பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Bank of Baroda
டெல்லி: தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அன்னிய முதலீடுகள் ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கிப் பணியாளர்கள் இன்று 2 நாள் ஸ்டிரைக்கைத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. ஏடிஎம் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் தனியார்மயமாக்கல், அன்னிய முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் ஸ்டிரைக் தொடங்கியுள்ளது.

இந்த போராட்டத்தில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 27 அரசு வங்கிகள், 26 தனியார்துறை வங்கிகளைச் சேர்ந்த 9 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. பல இடங்களில் அவை மூடப்பட்டுள்ளன.

ஸ்டிரைக் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பணம் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் ...

தமிழத்திலும் ஸ்டிரைக் முழுமையாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டுள்ளன. பல ஏடிஎம் மையங்களில் நேற்றே பலர் பணம் எடுத்து விட்டதால் காலையிலேயே பல மையங்கள் மூடப்பட்டு விட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X