For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரஞ்சீவியின் பாச்சா பலிக்காது: கூறுகிறார் ரோஜா

By Staff
Google Oneindia Tamil News

Roja
ஹைதராபாத்: நெசவாளர்கள் மீது பாசம் இருப்பது போல நடிக்கிறார் சிரஞ்சீவி. அவரது பாச்சா பலிக்காது என்று கூறியிருக்கிறார் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி நடிகை ரோஜா.

சமீபத்தில் கைத்தறி நெசவாளர்களின் நிலை குறித்து பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி கவலை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சிர்சிலா பகுதிக்குச் சென்றஅவர் நெசவாளர்களையும் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து நடிகை ரோஜா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் சிரஞ்சீவி. இதற்கு முன்பும் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டபோது அவர் வந்து பார்த்ததில்லை. இப்போது திடீரென போய் பார்த்திருக்கிறார், கவலை தெரிவிக்கிறார். பரிவு காட்டுவது போல நடிக்கிறார்.

அவரது பாச்சா பலிக்காது. அவரது பேச்சை கண்டு நெசவாளர்கள் ஏமாந்து போய் விட மாட்டார்கள் என்றார் ரோஜா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X