சிரஞ்சீவியின் பாச்சா பலிக்காது: கூறுகிறார் ரோஜா
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் கைத்தறி நெசவாளர்களின் நிலை குறித்து பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி கவலை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சிர்சிலா பகுதிக்குச் சென்றஅவர் நெசவாளர்களையும் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து நடிகை ரோஜா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் சிரஞ்சீவி. இதற்கு முன்பும் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டபோது அவர் வந்து பார்த்ததில்லை. இப்போது திடீரென போய் பார்த்திருக்கிறார், கவலை தெரிவிக்கிறார். பரிவு காட்டுவது போல நடிக்கிறார்.
அவரது பாச்சா பலிக்காது. அவரது பேச்சை கண்டு நெசவாளர்கள் ஏமாந்து போய் விட மாட்டார்கள் என்றார் ரோஜா.












Click it and Unblock the Notifications