For Daily Alerts
Just In
ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது: சோம்நாத் சாட்டர்ஜி
சண்டிகர்: தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
சண்டிகர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. இந்த எம்பி பதவியோடு சரி, அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
பிரிட்டனில் ஒரு நல்ல வழக்கம் உள்ளது. முன்னாள் சபாநாயகர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து வேட்பாளர்களை யாரும் நிறுத்த மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் அத்தகையை மரபை எதிர்பார்ப்பது கடினம். அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்த மரபை உருவாக்கும் என்று நினைப்பதும் கடினம் என்றார் சோம்நாத்.
Story first published: Wednesday, September 24, 2008, 10:15 [IST]