திருப்பதி சென்ற ரயிலில் தீ- 3 பயணிகள் மயக்கம்
ஹைதராபாத்: செகந்திராபாத்திலிருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிகளில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகையில் 3 பயணிகள் மயங்கி சரிந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஓங்கோல் மாவட்டத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ஏசி பெட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஏசி பெட்டிக்கும் தீ பரவியது.
இதைப் பார்த்த சில பயணிகள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட புகையால் 3 பயணிகள் மயங்கினர்.
கடந்த இரு மாதங்களில் ஆந்திராவில் ரயிலில் தீ விபத்து ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி செகந்திராபாத்-காக்கிநாடா கெளதமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 5 பெட்டிகள் முழுதாய் எரிந்து போனது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications