முகேஷ் மீது அனில் 10000 கோடி கேட்டு வழக்கு?
தன் அண்ணன் முகேஷ் அம்பானி மீது ரூ.10000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தம்பி அனில் அம்பானி வழக்கு தொடர்ந்துள்ளார் என பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அப்படியெதுவும் கிடையாது என முகேஷ் அம்பானி தரப்பு மறுத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அனில் அம்பானியை விமர்சிப்பது போல சில கருத்துக்களைச் சொல்லியிருந்தாராம் முகேஷ் அம்பானி.
இந்தக் கருத்துக்கள் தன்னைப் புண்படுத்துவதாகவும், தனக்கும் தன் அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி இந்த மான நஷ்ட வழக்கைத் அனில் தொடர்ந்துள்ளதாகப் பேசப்பட்டது.
மும்பை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதமே இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று இதுகுறித்து கேட்டபோது முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் முகேஷ் அம்பானியின் செய்தித் தொடர்பாளர்.
ஆனால் புதன் கிழமை மாலை இதுகுறித்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில், இப்படியொரு வழக்கே பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர்.
ரூ.10,000 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர வேண்டுமானால் அதற்கு கோர்ட் கட்டணமாக ரூ.100 கோடி செலுத்த வேண்டும். இதன் காரணமாகவே வழக்குத் தொடராமல் விட்டுவிடார் அனில் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications