For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுரோடு..கள்ளக்காதலி-ஏட்டு கட்டிப்புடி சண்டை!

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: சாலையில் சென்று கொண்டிருந்தபோது கள்ளக் காதலியுடன் சண்டை ஏற்பட்டதால் அவரோடு கட்டிப்புரண்டு சண்டை போட்டார் போலீஸ்காரர். இந்த சண்டையை ஊரே கூடி வேடிக்கை பார்த்தது.

பாளையங்கோட்டை ஆயுதப்படையில் காவலராக இருப்பவர் மனோகரன். இவரு நண்பர் சென்னையில் ஆப்டிகல்ஸ் நடத்தி வருகிறார். இவரது கடையில் வேலை பார்ப்பவர் திருச்சியை சேர்ந்த கௌரி. கணவனை பிரிந்து வாழ்கிறார்.

மனோகரன் தனது நண்பரிடன் கடைக்கு செல்லும்போது கௌரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கௌரி அடிக்கடி நெல்லை வந்து மனோகரனுடன் தங்கியிருந்து குடும்பம் நடந்தி வந்தார்.

இதையறிந்த மனோகரின் பெற்றொர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையறிந்த கௌரி சில தினங்களுக்கு முன் நெல்லைக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் திருச்செந்தூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மனகாவலம் பிள்ளை நகர் அருகே பைக்கை நிறுத்திய மனோகரன், கௌரியை கீழே தள்ளி அடித்து உதைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கௌரியும் பதிலுக்கு மனோகரனை தாக்கினார். நடுரோட்டில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தனர். இதனால் கூட்டம் கூடியது.

தகவலறிந்த கட்டுபாட்டு அறை போலீசார் அங்கு விரைந்தனர். இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X