For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்-17 வெடி குண்டுகள் மீட்பு-நவராத்திரி தொடங்கவுள்ள நிலையில் பீதி

By Staff
Google Oneindia Tamil News

Gujarat
அகமதாபாத்: நவராத்திரி விழா தொடங்கவுள்ள நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் இன்று 17 வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பீதி பரவியுள்ள்ளது.

அகமதாபாத்தின் காலுபூர் தர்வாஸா என்ற இடத்தில் ஒரு குப்பைத் தொட்டியில் இவை கிடந்தன. இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குண்டுகளை கைப்பற்றி, அவற்றை செயலிழக்கச் செய்தனர்.

அகமதாபாத்தில் கடந்த ஜூலை 26ம் தேதி 22 இடங்களில் குண்டுகள் வெடித்து 56 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த சில நாட்களில் சூரத் நகரிலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந் நிலையில் மீண்டும் அகமதாபாத்தில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X