பஞ்சாபுக்கு தீவிரவாதிகள் குறி: உளவுத்துறை எச்சரிக்கை

தலைநகர் டெல்லியில் இருமுறை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் ஒருமுறை அதிர்ந்துள்ளன. அடுத்து எந்த நகரம் என்ற பரபரப்பில் ஒட்டுமொத்த இந்தியாவும் பதட்டத்துடன் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சாபுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய உளவுத்துறை, மாநில அரசை எச்சரித்துள்ளது. உள்ளூரில் உள்ள தீவிரவாத அமைப்புகளான பாபர் கல்சா, காலிஸ்தான் கமாண்டோ படை என்கிற இரு அமைப்புகளுடனும், லஷ்கர் அமைப்பு தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த இரு அமைப்புகளின் மூலம் பஞ்சாபின் முக்கிய இடங்கள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
5 குண்டுகள் சிக்கின:
இதை நிரூபிக்கும் வகையில், மொஹாலி அருகே வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இவை அனைத்தும் சாதாரண வகை நாட்டு வெடிகுண்டுகள். குறைந்த சக்தி கொண்டவை.
இவற்றை போலீஸார் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
உளவுத்துறை எச்சரிக்கை, வெடிகுண்டுகள் சிக்கியது ஆகியவற்றைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்ைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications