முதல்வருக்கு 5,000 'பிஸியோதெரபிஸ்ட்' தந்திகள்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: பிஸியோதெரபிஸ்ட் படிப்புக்கு தனி கவுன்சில் துவங்க வேண்டும் என்று கோரி அத்துறை மாணவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 5,000 தந்திகள் அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் பிஸியோதெரபிஸ்ட் பட்டப் படிப்பு முடித்த பல ஆயிரம் மாணவர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
தங்களுக்கு அரசு முழு அங்கீகாரம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் இவர்கள், தங்கள் படிப்புக்கென தனி கவுன்சில் துவங்கி அதில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகி்ன்றனர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி, சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்கு பிஸியோதெரபிஸ்ட் டாக்டர்கள் சார்பில் தமிழகம் முழுவதில் இருந்து ஒரே நாளில் 5,000 தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications