அகர்த்தலாவில் 5 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு 4 பேர் பலி
அகர்தலா: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஐந்து இடங்களில் இன்று மாலை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முதல் குண்டு அகர்தலாவின் புகழ்பெற்ற கோல் பஜார் மார்க்கெட் பகுதியில் நடந்தது. அதைத் தொடர்ந்து இரு குண்டுகள் அருகே உள்ள ஜிபி மார்க்கெட் மற்றும் பஸ் நிலையத்தில் வெடித்தன.
நிலைமையின் தீவிரம் உணர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அடுத்த 45 நிமிட நேரத்துக்குள் மேலும் இரு குண்டுகள் வெடித்தன.
இந்த ஐந்து குண்டுவெடிப்புகளில் இரண்டு கடுமையானவை என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த அனைவரும் ஜிபி பந்த் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குள் அகர்த்தலா முழுக்க பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications