For Daily Alerts
Just In
தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்
சென்னை: தமிழகத்தில் இன்று ரம்ஜான் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் சிறப்பு தொழுகைகள் நடந்தன.
ஒரு மாத கால ரமலான் நோன்பின் முடிவான நேற்றைய தினம் இரவு ஷவால் பிறை தென்பட்டதையடுத்து இன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜியார் சலாகுதீன் முகம்மது அயூப் தெரிவித்தார்.
அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று காலை சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
ரம்ஜானையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதர பகுதிகளில் நாளை..
இருப்பினும் இந்தியாவின் பிற பகுதிகளில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் ஷாஹி இமாம் அகமது புகாரி அறிவித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, October 1, 2008, 17:52 [IST]