மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவிகள் பலி
மதுரை: மதுரை அருகே கண்மாயில் மூழ்கி மூன்று மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்தவர்கள் நித்யா (14), நாகஜோதி (15) மற்றும் கார்த்திகை செல்வி (15). மூன்று பேரும் தோழிகள்.
நித்யாவை தவிர மற்ற இருவரும் கப்பலூர் பள்ளியில் படித்து வந்தனர். காலாண்டு விடுமுறை என்பதால் தோழிகள் மூன்று பேரும் கார்த்திகை செல்வியின் அண்ணன் ராஜாவுடன் முள் வெட்டுவதற்காக கண்மாய்க்கு சென்றனர்.
பின்னர் தோழிகள் மூன்று பேரும் கண்மாயில் குளிக்க சென்றுள்ளனர். ஆழம் அதிகம் உள்ள பகுதியில் நீச்சலடித்து குளித்தபோது சகதியில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ராஜா உள்பட வேலை செய்துக் கொண்டிருந்தோர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மூன்று பேரும் மூழ்கி இறந்தனர்.
இதை பார்த்த ராஜா கதறினார். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications