For Daily Alerts
Just In
பங்குச் சந்தையில் இன்றும் கடும் வீழ்ச்சி!
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 400 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 73 புள்ளிகள் குறைந்தன.
இன்று பங்குச் சந்தை துவங்கியபோதே 204 புள்ளிகள் குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டெர்லைட் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் இன்று கடும் சரிவுக்குள்ளாகின.
சர்வதேச பங்குச் சந்தைகளின் பலவீன நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் இன்று வீழ்ச்சி நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்போதைய நிலவரப்படி சென்செக்ல் 12663 புள்ளிகளாகவும், நிப்டி 3847 ஆகவும் உள்ளது.
Comments
Story first published: Friday, October 3, 2008, 15:39 [IST]