காந்தி ஜெயந்தியன்று மதுவிற்ற திமுக செயலர் கைது
நெல்லை: நெல்லை அருகே காந்தி ஜெயந்தியன்று மதுபானம் விற்பனை செய்த திமுக செயலர் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் மது விற்பனை, பார் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியன்று மது விற்ற திமுக செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் வேல்சாமி பாண்டியன். பேரூர் திமுக செயலாளரான அவர் அங்குள்ள டாஸ்மாக் கடையை குத்தகைக்கு எடுத்து பார் நடத்தி வருகிறார்.
காந்தி ஜெயந்தியன்று வேல்சாமி பாண்டியன் பார் அருகில் உள்ள தனது ரைஸ் மில்லில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்றுக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த சாம்பவர் வடகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வேல்சாமி பாண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications