பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது: போலீஸாருக்கு அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை போலீஸாரும் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகர போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை ஆணையர் சேகர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல போலீஸாருக்கும் பொருந்தும். பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவாஜி சிலை மீது லாரி மோதியது குறித்து கவனக்குறைவாக லாரி ஓட்டிவந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகளுக்கு விதிமுறைப்படி உரிமம் வழங்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தீவிரவாத அச்சுறுத்தலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வடிவேலு - தீவிர புலன் விசாரணை:

நடிகர் வடிவேல் வீடு தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இரண்டரை வயது குழந்தையை கடத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள ஜூகுன் என்பவர் ஜார்க்கண்ட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+