மத மாற்ற முயற்சி புகார்: 2 கிறிஸ்தவ மத போதகர்கள் கைது
திருப்பூர்: திருப்பூர் அருகே மத மாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மத போதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஓட்டகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் காட்வின் (33). கிறிஸ்தவ மதபோதகர். தனது தங்கையின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் தனது பங்கு பாதிரியாருக்கும் கொடுப்பதறாக நேற்று முன் தினம் திருப்பூர் வந்தார்.
அப்போது, திருப்பூர் அருகே, அனுப்பர்பாளையம் புதூர், திலகர் நகர், புதுக் காலனி பகுதிகளில் கிறிஸ்துவ மத பிச்சார நோட்டீஸ்களை வினியோகம் செய்தார். அப்போது புதுக்காலனி அரும்புக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரதீஷ் (23) என்பவரிடம் மத பிரசார நோட்டீஸ்களை கொடுத்த காட்வின், மதம் மாறும்படி கூறியுள்ளார்.
அதற்கு ரதீஷ் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காட்வின், ரதீஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரதீஷூக்கு மூக்கில் ரத்தம் வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் காட்வினை அனுப்பர்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரதீஷ் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இந்து முன்னணியினரும், அப்பகுதி மக்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் காட்வினைக் கைது செய்தனர். ரதீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்னொரு போதகரும் கைது:
அவரை இந்து முன்னணியில் பார்க்க வந்தனர். அப்போது அங்கு வந்த ஜோசப் என்ற இன்னொரு போதகர், கிறிஸ்தவ மதம் தொடர்பான நோட்டீஸ்களை விநியோகித்து மதமாற்றம் குறித்து பேசியுள்ளார்.
இதனால், ஏற்கனவே கோபத்தில் இருந்த இந்து முன்னணியினர் மேலும் ஆத்திரமடைந்தார்கள். இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோசப்பையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications