For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் - ராமதாஸுக்கு மீது ஆற்காடு கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தொழிற்சாலைகளுக்கு ரூ.1,440 கோடியில் இலவச மின்சாரம் வழங்கப்போவதாக தவறான தகவலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் அளிப்பதை போலவும் இதற்காக ஆண்டுக்கு ரூ.1,440 கோடி மானியமாக வழங்க இருப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.

மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகளுக்கு கொடுக்கும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொடுப்பதற்கு பதிலாக அந்த மின்சாரத்தை விவசாயிகள், வீடுகள், தெரு விளக்குகள், கடைகள், குடிசைகளுக்கும் பொருட்டு தொழிலதிபர்களை ஜெனரேட்டர்களை பயன்படுத்த மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.50 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதை புரிந்து கொள்ளாமல், ஏதோ தொழிற்சாலைகளுக்கு ரூ.1,440 கோடியில் இலவச மின்சாரம் வழங்கபோவதாக ராமதாஸ் தவறான தகவல்களை தந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X