பிரபாகரன் உருவில் பகத்சிங்கை காண்கிறேன்: வைகோ
சென்னை: மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் எழுதிய கனவாகிப்போன கச்சத்தீவு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நூலை வைகோ வெளியிட நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை தம்பி பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன். தமிழினத்தை மீட்க விடுதலை புலிகள் போர்க்களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் ஆயுத போராட்டம் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதை வைத்து அங்குள்ள தமிழர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் யுத்தத்தை இந்திய அரசுதான் பின் நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படி பேசுவது, தேசதுரோகம் என்றால் இந்த தேசதுரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான். இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பது மற்றும் தேசபக்தியா
இந்திய அரசு, ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்திருப்பது இன்னும் வெளிவராத செய்தி. இந்த ஒப்பந்தம் 2013ம் ஆண்டு வரை அமலில் இருக்கப்போகிறது.
தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை கண்டித்தும், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுக்கக் கோரியும் வரும் 10ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திரண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
இந்த ஒரு ப்ராஜக்ட் போதும்.. சென்னையின் அடையாளமே மாறப்போகிறது.. பணிகள் ஓவர்.. எதிர்பார்க்காத திட்டம் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!











Click it and Unblock the Notifications