10ம் தேதி கையெழுத்தாகிறது அணு ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது. இதுதொடர்பான சட்ட மசோதாவில் அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டால் அது சட்டமாகி விடும். அந்தக் கையெழுத்தை புஷ் இன்று போடவுள்ளார்.
இதையடுத்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களான கான்டலீசா ரைஸும், பிரணாப் முகர்ஜியும் வருகிற 10ம் தேதி அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.
இதற்காக பிரணாப் முகர்ஜி அமெரிக்கா செல்கிறார். கையெழுத்திட்டவுடன் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
கடந்த 34 வருடங்களாக இருந்து வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விலக்கப்பட்ட பின்னர் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.












Click it and Unblock the Notifications