உத்தபுரத்தில் சோகம் - ஆண்கள் இல்லாததால் பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு
மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் மரணமடைந்த சித்ரா என்ற ெபண்ணின் உடலை, ஆண்கள் யாரும் இல்லாததால், ஊர்ப் பெண்கள் அனைவரும் சேர்ந்து அடக்கம் செய்த சோகம் நடந்துள்ளது.
ஜாதிக் கலவரத்தால் தகித்துக் கொண்டிருக்கும் உத்தபுரத்தில் போலீஸாரின் நடவடிக்கைக்குப் பயந்து ஆண்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து விட்டு தலைமைறைவாகியுள்ளனர்.
இதனால் ஊரில் ஒரு ஆண் கூட இல்லை. இந்த நிலையில் தலித் வகுப்பைச் ேசர்ந்த சித்ரா என்ற இளம் பெண் மரணமடைந்தார். போலீஸ் சித்திரவதையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவின் இறுதிச் சடங்கு நடந்தது. ஆண்கள் யாரும் இல்லாததால் பெண்களே ஒன்று கூடி இறுதிச் சடங்கை நடத்தினர். நான்கே நான்கு ஆண்களை மட்டும் இதில் கலந்து கொள்ள போலீஸார் அனுமதித்திருந்தனர். ஆனால் அவர்களை ஒரு வேலையும் செய்ய பெண்கள் விடவில்லை.
இறந்து போன சித்ராவின் உடலை சவ வண்டியில் ஏற்றி, சுடுகாட்டுக்குக் கொண்டு சென்ற பெண்கள் அங்கு இறுதிச் சடங்குகளை நடத்தி அடக்கம் செய்தனர்.
சித்ராவுக்கு தந்தை, 3 சகோதரர்கள் உள்ளனர். நான்கு பேரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications