For Daily Alerts
Just In
ஊர்வலம்: 213 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது
கோவை: கோவை மாவட்டம், அவினாசியில் போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு ஊர்வலம் நடத்திய ஆர்எஸ்எஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள அவினாசியில் தாலுக்கா அலுவலகம் அருகில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணி வகுப்பு ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஆனால் இந்த தடையை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த 213 தொண்டர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Comments
Story first published: Monday, October 13, 2008, 13:57 [IST]