ஜனாதிபதி பிரதீபாவுக்கு 5 இ-மெயில் மிரட்டல்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு 5 இ-மெயில் மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புனே சென்ற ஜனாதிபதி பிரதீபாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் அந்த மிரட்டல் இ-மெயில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பபட்டது தெரிய வந்தது.

ஏர்டெல் நிறுவனத்தின் இணைய தள சேவை மூலம் இந்த மிரட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னொரு இணையதள முகவரியில் இருந்து பிரதீபாவுக்கு நேற்று 5 இ-மெயில் மிரட்டல்கள் வந்தன. அதில் பிரதீபாவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த மிரட்டல் இ-மெயில்கள் பிரதீபாவின் அலுவலக இணைய தளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+