பணவீக்கம் குறைந்ததால் சற்றே நிமிர்ந்த சென்செக்ஸ்!

வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களில் 600 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 155 புள்ளிகள் குறைந்தது முதலீட்டாளர்களுக்கு பீதியைக் கிளப்பியது.
அடுத்த சில மணிநேரங்களில் சில புள்ளிகள் உயர்வைக் காட்டினாலும், சென்செக்ஸின் சிவப்புக் குறிகள் மாறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிய, மும்பை தலால் ஸ்ட்ரீட்டில் கூடியிருந்த தரகர்களும், முதலீட்டாளர்களும் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர்.
ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர், ஜேபி இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கிராஸிம் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் பெரும் சரிவுக்குள்ளாயின.
சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, குறிப்பாக அமெரிக்க நிதி நெருக்டிகள்தான் இந்த நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி நிலைக்கு வந்துவிட்டதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்ததன் விளைவாக எழுந்துள்ள அச்சமும் நிலையற்ற தன்மையுமே இந்த மோசமான நிலைக்குக் காரணம் எனப்படுகிறது.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 10308 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 3196 புள்ளிகள்.
சற்றே மீண்டது!:
பிற்பகலுக்குப் பிறகு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. சரிவிலிருந்து கொஞ்சமாக மீளத் தொடங்கிய சென்செக்ஸில் வர்த்தக நேர முடிவில் 227 புள்ளிகள் குறைந்து 10581-ல் நிலைபெற்றது.
நிப்டியிலும் இதே நிலைதான். 174 புள்ளி வீழ்ச்சியிலிருந்து மீண்ட நிப்டி வர்த்தக நேர முடிவில் 69 புள்ளிகள் குறைந்து 3269.30-ல் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications