அத்வானிக்கு கார் ஓட்ட தடுக்கப்பட்ட முஸ்லீம் போலீசார்

கேரளத்தில் அத்வானி யாத்திரை நடத்தும் முன் கோழிக்கோடு வந்த தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், அவரது பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது கோழிக்கோட்டில் அத்வானியின் வாகனத்தை ஓட்ட இரு முஸ்லீம் போலீசார் நியமிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த கமாண்டோக்கள் அதை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இவருமே அந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. தேசிய பாதுகாப்புப் படையின் இந்தச் செயலுக்கு கேரளத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து கேரள மாநில முஸ்லீம் லீக் தலைவரும் வெளியுறவு இணையமைச்சருமான அகமது மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தாவை நேரில் சந்தித்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு தேசிய பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் தத்துக்கு உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், இது குறித்து தேசிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையி்ல், இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications