'தம்'-தமிழகத்தில் ரூ1.20 லட்சம் அபராதம் வசூல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் சுகாதாரத் துறை இதுவரை ரூ. 1.20 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில்,

ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணி நியமன தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுகாதாரத் துறையில் இதுவரை 21,558 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ. 76 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.நிதி ஒதுக்கியதும் உடனே கட்டடம் கட்டிவிட முடியாது. பிளாஸ்மா ரத்த வங்கி அமைத்தல் மற்றும் சென்னை அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு அமைத்தல் ஆகியவற்றிற்கு இது வரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

அவர்கள் கேட்டுக் கொண்டபடி மாநில அரசு இடம் ஒதுக்கித் தந்துள்ளது. இதுவரை தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறியவர்கள் (அன்புமணி), தற்போது திடீரென அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.

பொது இடங்களில் சிகரெட் பிடித்தவர்களிடம் இருந்து சுகாதாரத் துறை இதுவரை ரூ. 1.20 லட்சத்தை அபராதமாக வசூல் செய்துள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+