விலைவாசி உயர்வு: 3 கட்ட போராட்டம்: சிபிஐ
திருவாரூர்: விலைவாசி உயர்வை கண்டித்து மூன்று கட்ட போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகத்தில் மூன்று கட்ட போராட்டம் நடத்தப்படும். மாதர் சம்மேளனம் சார்பில் இம்மாதத்தில் பிரசார இயக்கம் நடத்தப்படும். அதேபோல நவம்பரில் மத்திய, மாநில அரசு அலுவலங்கள் முன்பு ஆர்பாட்டம் நடைபெறும். டிசம்பர் மாதம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
தொடர் மழை காரணமாக குறுவை அறுவடை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இட ஒதுக்கீடு கொள்கையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்டோருக்கான காலி பணியிடங்களை அவர்களை கொண்டே நிரப்ப வேண்டும்.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாக பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும்.












Click it and Unblock the Notifications