10000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது சென்செக்ஸ்!
மும்பை: இந்திய பங்குச் சந்தைக்கு இன்று மிக மோசமான நாள். இன்று சென்செக்ஸ் குறியீட்டு எண் 10000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்செக்ஸ் இந்த அளவு மோசமான நிலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இன்று வர்த்தக நேரத் துவக்கத்தில் 200 புள்ளிகள் ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் போகப் போக சரியத் துவங்கியது.
ஒரு கட்டத்தில் 791 புள்ளிகள் குறைந்துவிட, சென்செக்ஸ் 10,000 புள்ளிகள் என்ற கட்டத்தையும் தாண்டி சரிந்தது. கடந்த 18 மாதங்களில் சென்செக்ஸ் 10,000 புள்ளிகளுக்குக் கீழ் போயிருப்பது இதுவே முதல் முறை.
ஸ்டெரிலைட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிஎல்எப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் வரை சரிந்தன.
பிற்பகல் வர்த்தகம் முடிவடையும் நேரத்தில் சென்செக்ஸ் 668 புள்ளிகள் குறைந்து 9913.19 ஆகவும், நிப்டி 215 புள்ளிகள் குறைந்து 3053 ஆகவும் இருந்த்து.
பரவும் வதந்தி!:
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் அவற்றை முறியடிக்கும் விதமாக தொடர்ந்து பொருளாதாரம் குறித்து தவறான செய்திகள் பரவி வருவதால் பங்கு வர்த்தகம் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
தொடர்ந்து 3 நாட்களாக உலக பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் அளவு பல லட்சம் கோடிகள்.
இந் நிலையில் அமெரிக்க பங்குச் சந்தையான டெள ஜோன்சிலும் ஆரம்பமே சறுக்கியது. எடுத்த எடுப்பிலேயே 219 புள்ளிகள் சரிந்தன.












Click it and Unblock the Notifications