சென்னையில் கடும் மழை-நாளையும் பெய்யும்

இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது.
கடந்த வாரம் இலங்கை கடல் பகுதியில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தொடங்கிய மழை, இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் ஆரம்பித்தது.
இம்முறை மழைக்குக் காரணமாக அமைந்தது வங்காள விரிகுடாவில் சென்னை – ஆந்திரா இடையே நிலைகொண்டிருந்த புயல் சின்னம்.
இதுகுறித்து சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில், வங்கக் கடலில் ஆந்திரா-தமிழ்நாட்டுக்கிடையே நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்னும் அங்கேயே நிலை கொண்டுள்ளது. இது நகர ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் ஆகலாம். அதுவரை தமிழகம், புதுவையில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள், என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகபட்சம் 10 செமீ வரை மழை பெய்துள்ளது.
சென்னையில் 24 மணி நேரத்தில் 11 செமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications