தமிழகத்தில் எஸ்பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் எஸ்பிக்கள் உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,
மதுரை நகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) ஆர்.ராமராஜன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை கமிஷனர் (தலைமையகம்) ஜே.ரவீந்திரன், சென்னை தலைமையக உதவி ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் எஸ்.பிரபாகரன், வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாக மாற்றப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட எஸ்பி சண்முகவேல், கோவை நகர துணை கமிஷனராக (குற்றம்-போக்குவரத்து) மாற்றப்பட்டுள்ளார்.
கோவை துணை கமிஷனர் (குற்றம்-போக்குவரத்து) தொண்டிராஜ், மதுரை நகர துணை கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி ரயில்வே எஸ்பி ராஜசேகரன், மதுரை நகர துணை கமிஷனராக (குற்றம்) மாற்றப்பட்டுள்ளார். இவர் மதுரை போக்குவரத்து துணை கமிஷனருக்கான கூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.
வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்ட் ராஜேந்திரன், திருச்சி ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக உதவி ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, கரூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை புறநகர் போக்குவரத்துத் துணைக் கமிஷனர் மனோகரன், சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, சென்னை புறநகர் போக்குவரத்து துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹா, அரியலூர் மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications