கன்னியாகுமரி முந்திரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்
தக்கலை: கன்னியாகுமரி மாவட்ட முந்திரி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 450க்கும் மேற்பட்ட முந்திரி ஆலைகள் உள்ளன. குமரியில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
கேரளாவில் வழங்கப்படுவது போல் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும். இஎஸ்ஐ பிடித்தம் செய்து குமரி மாவட்டத்தில் தலைமை இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முந்திரி தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் நேற்று வேலை நிறுத்தம் நடந்தது.
இதை தொடர்ந்து முந்திரி தொழிலாளர்கள் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பத்மனாபபுரம் கோட்டாட்சியர் அலுலவகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எம்எல்ஏக்கள் லீமாரோஸ், ஜான்ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்ததால் ஏராளமான முந்திரி ஆலைகள் மூடி கிடக்கின்றன. இதனால் 3 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.