For Daily Alerts
Just In
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாமக மாணவர் அணி பேரணி
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாமக மாணவர் அணி சார்பில் அக்டோபர் 23ம் தேதி சென்னையில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக மாணவர்கள் (பொறியியல்) பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் பட்டு வரும் துயரங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், 23ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும்.
சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இந்தப் பேரணி முடிவடையும். பேரணியின் முடிவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, October 22, 2008, 9:51 [IST]