குமரி அருகே பிரபாகரன் பேனர் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: பாவூர்சத்திரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் டிஜிட்டல் போர்டை போலீசார் அகற்றினர்.
குமரி மாவட்டம் கீழப்பாவூர் மைதானத்தில் பாவூர்சத்திரம் இளைஞரணி என்ற பெயரில் டிஜிட்டல் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதில் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் தமிழர் இன உணர்வு கொள், மத்திய அரசே, மத்திய அரசே, இலங்கை தமிழர்களை காப்பாற்று... தமிழீழ தலைவர்களை கொன்று குவிக்கும் ராஜபாக்சே அரசை கண்டிக்கிறோம். தமிழ் சமுதாயமே தமிழ் இனம் காக்க போராடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்தார். அனுமதியின்ற வைக்கப்பட்டிருந்த போர்டை போலீசார் விரைந்து வந்து அகற்றினர்.












Click it and Unblock the Notifications