பலாத்காரம்: இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்
திருவாரூர்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜேந்திரன் கடந்த 16ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர் 3 பஸ்களை அடித்து உடைத்தனர். இது தொடர்பாக கோட்டூர் போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடன் கனகராஜ் என்பவரது வீட்டிற்கு சென்றார். அப்போது கனகராஜ் வீட்டில் இல்லை. அவரது மனைவி காந்திமதி மட்டும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தன்னை இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் காந்திமதி புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காந்திமதியை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications