ஷார்ஜாவில் இந்தியர் தூக்கு போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
துபாய்: இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர் ஷார்ஜாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷார்ஜா, அல்சஜா பகுதியில் தங்கி வேலை செய்த இந்தியர் சாஜூ (35). கான்ட்ராக்ட் கம்பெனியில் வேலை செய்தார். நேற்று காலை சாஜூ வேலைக்கு வராததை அடுத்து மற்ற ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சாஜூ மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களில் இதுவரை 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி மற்றும் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications