பிச்சைக்காரரிடம் பணம் பறித்த 2 போலீஸார் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: உடல் ஊனமுற்ற பிச்சைக்காரரிடம் பணம் பறித்த 2 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நெல்லை ஜங்ஷனை சேர்ந்தவர் அந்தோணி. உடல் ஊனமுற்ற இவர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.. இவருக்கு தினமும் ரூ.200 வரை வருமானம் கிடைத்து வந்தது.

ஜங்ஷன் மற்றும் டவுன் காவல்நிலையத்தில் பணியாற்றிய 2 போலீஸ்காரர்கள் அந்தோணியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்து வந்தனர். அவர் தர முடியாது என்று மறுத்தபோது உன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைப்போம் எனவும் மிரட்டினர்.

இதுகுறித்து அந்தோணி போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பணம் பறித்தது உண்மை என தெரிய வந்தது.

இதையடுத்து ஜங்ஷன் காவல் நிலைய போலீஸ்காரர் முரளி கடந்த சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அந்தோணி ராஜும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+