தஞ்சையில் ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சையில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்து தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஈழத் தமிழர்களுக்காக போராடுபவர்களை தேச துரோகக் குற்றத்தில் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவித்ததற்காக அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் தெரிவித்தனர். மேலும் தஞ்சை ரயிலடியில் நேற்று மாலை கூடிய அக்கட்சியினர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தனர்.
ஜெயலலிதாவின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து அக்கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications